காத்தான்குடி நகர சபைக்கு தெரிவான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களில் ஆண் உறுப்பினர்கள் இருவர் 30.3.2018 வெள்ளிக்கிழமை இன்று ஜும்ஆத்தொழுகையின் பின்னர் பள்ளிவாயலில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி மற்றும் இல்மி அஹமட்லெவ்வை ஆகிய இருவரும் இதன் போது உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு பெண் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் வேறொரு தினத்தில் பிரத்தியேகமாக இடம் பெறுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவித்துள்ளது.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு 4 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் இரண்டு ஆண் உறுப்பினர்களும் இரண்டு பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment