முஸ்லிம் அரச ஊழி­யர்கள் "ஜும்ஆத் தொழு­கைக்கு செல்­வதை கட்­டுப்­ப­டுத்தும் சுற்­று­நி­ரு­பத்தை ரத்து செய்யவும்" - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

முஸ்லிம் அரச ஊழி­யர்கள் "ஜும்ஆத் தொழு­கைக்கு செல்­வதை கட்­டுப்­ப­டுத்தும் சுற்­று­நி­ரு­பத்தை ரத்து செய்யவும்"

முஸ்லிம் அரச ஊழி­யர்கள் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆத் தொழு­கைக்கு செல்­வது தொடர்பில் பொது நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்­று­நி­ருபம் உட­ன­டி­யா­க­ இ­ரத்து செய்­யப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இலங்கை கல்வி நிர்­வாக சேவை அதி­கா­ரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்­பாக சங்­கத்தின் செய­லாளர் ஏ.எல்.எம். முக்தார் ஜனாதிப­திக்கு அனுப்பி வைத்­துள்ள மக­ஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதா­வது;

இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் மத சுதந்­திரம் என்­பது அர­சி­ய­ல­மைப்பில் அடிப்­படை உரி­மை­களில் ஒன்­றாக உறுதிப்படுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது அர­சி­ய­ல­மைப்பின் 14 ஆம் அத்தி­யாயம் 1 (2) பிரி­விலும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நிறு­வனத் தலை­வர்­களின் தீர்­மா­னத்­திற்­க­மை­வாக நிறு­வன செயற்­பா­டு­க­ளுக்கு தடை ஏற்­ப­டாத வகையில் முஸ்லிம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆத் தொழுகையை நிறை­வேற்­று­வ­தற்­காக இரண்டு மணி நேர விசேட விடு­முறை வழங்­கப்­ப­டலாம் என பொது நிர்­வாக அமைச்சின் 21/2016 ஆம் இலக்க சுற்­று­நி­ருபம் மூலம் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை இந்த சுற்­று­நி­ருபம் தாபனக் கோவையின் Xii ஆம் அத்தி­யாயம் 12:1 க்கு திருத்­த­மாக சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­சரவை பத்­தி­ரத்தை அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்­ளது.

இந்­ந­ட­வ­டிக்­கை­யா­னது முற்­று­மு­ழு­தாக இலங்கை அரசியலமைப்பின் அடிப்­படை உரி­மையை மீறும் செயல் என்பதுடன் அர­சி­ய­ல­மைப்பின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மத சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

எனவே முஸ்லிம் அரச ஊழி­யர்­களின் அடிப்­படை உரி­மையை மீறும் வகையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த சுற்­று­நி­ரு­பத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெற்று, முஸ்லிம் ஊழி­யர்­க­ளுக்கு பாதிப்­பில்லாத வகையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். 

இல்லையேல் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அறியத்தருகின்றோம்" என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment