திகன பகுதிக்கு விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

திகன பகுதிக்கு விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு

திகன பிரதேசத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படை பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் குறிப்பிட்டனர்.

தற்பொழுது திகன பிரதேசத்தின் அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக வினவியபோதே அவர்கள் குறிப்பிட்டனர்.

சற்றுமுன்னார் பொலிஸ் மா அதிபர்,  விஷேட அதிரடிப்படை பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் இருவரும் உரையாடியதாக கூறிய அவர்கள் தேவை ஏற்பட்டால் இராணுவத்தினரையும் களமிறக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment