இலங்கையில் சிசு மரணங்கள்: சுகாதார அமைச்சு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

இலங்கையில் சிசு மரணங்கள்: சுகாதார அமைச்சு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்­கையில் வரு­டாந்தம் 1700 சிசு மர­ணங்கள் சம்­ப­விக்­கின்­றன. இவை தாயின் கரு­வ­றையில் சிசு உரு­வாகி 28 வாரங்­களின் பின் ஏற்படக்கூடிய கருச்­சி­தை­வினால் ஏற்­ப­டக்­கூ­டி­ய­ன­வாகும். குழந்தை பிறந்து முதல் வாரத்­திற்குள் 1550 சிசு மர­ணங்கள் சம்பவிக்கின்­றன என்று சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரி­வித்தார். 

சுகா­தார பணி­ம­னையில் உலக பிறவி குறை­பா­டுகள் தினத்தை முன்­னிட்டு இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், 

தாய் அல்­லது தந்­தையின் பரம்­ப­ரையில் காணப்­படும் குறைபாடுகளே சிசு மர­ணங்­க­ளுக்கு பிர­தான கார­ணங்­க­ளாகும். ஆரோக்­கி­ய­மற்ற, வலது குறைந்த குழந்­தைகள் பிறக்க கர்ப்பிணியின் சூழல், தாயிடம் காணப்­படும் நோய்கள், மன­நிலை, பாவிக் கும் மருந்து வகை­களின் தாக்கம் என்­பன காரணமாகின்றன. அதே­வேளை 35 சத­வீ­த­மான சிசு மர­ணங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள் இது­வ­ரையில் கண்டறியப்படவில்லை. இத்­த­கைய கருச்­சி­தை­வா­னது ஆண்­டுக்கு சுமார் 100000 கர்ப்­பிணி தாய்­மா­ருக்­கி­டையே நிகழ்­கின்­றது. 

கரு­வுற்ற தாய் தனது குழந்­தையின் பிர­சவம் தொடர்பில் அக்கறையுடன் இருக்க வேண்டும். இதில் பெரும்­பா­லான தாய்மார் தனது உடல் ஆரோக்­கியம் குறித்து அக்­கறை காட்டும் அதே­வேளை தனது உள ஆரோக்­கியம் தொடர்பில் அக்­கறை கொள்­வ­தில்லை. 

இதனால் பிறக்கும் குழந்தை ஆரோக்­கி­ய­மற்­ற­தா­கவும் உடல் உபாதை­க­ளுக்கு ஆளான குழந்­தை­யா­கவும் பிறக்­கின்­றன. சில தாய்­மார்கள் மது அருந்தும் பழக்­க­மு­டை­ய­வர்­க­ளாயின் பிறக்கும் குழந்தை கண்கள் ஒடுங்­கி­ய­வாறும் வாயின் மேலு­தடு சற்று தூக்கிய நிலை­யிலும் பிறக்க வாய்ப்­புண்டு. ஆனால் இத்­த­கைய குழந்­தைகள் ஆரோக்­கி­ய­மா­ன­வர்கள் என நினைக்­கின்­றார்கள். ஆனால் அவையும் ஒரு­வித குறை­பா­டு­க­ளாகும் எனப் பல­ருக்குத் தெரி­வ ­தில்லை. 

மேலும் பரம்­ப­ரையில் ஏதேனும் ஒரு குழந்தை பிறந்து சில நாட்­களில் இறக்­கு­மாயின் அல்­லது ஏதேனும் குறை­பா­டு­க­ளோடு பிறந்து இறக்கு­மாயின் அவ்­வாறு இறந்த குழந்­தை­களை கட்­டாயம் மர­பணு சோத­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும். ஆனால் பொது மக்கள் அதை விரும்­பு­வ­தில்லை. மூடநம்­பிக்­கை­க­ளினால் தனது அடுத்த பிரசவத்தையும் முறை­யாக செய்ய முடி­யாமல் ஆரோக்­கி­ய­மான குழந்­தையை பெற்­றெ­டுக்க தவ­று­கின்­றனர். 

மர­பணு சோதனை செய்­வ­த­னூ­டாக குழந்தை இறக்க காரணம் என்ன, அடுத்த குழந்­தைக்கும் அதே மாதி­ரி­யான பிரச்­சி­னைகள் ஏற்ப­டுமா போன்ற பல கேள்­வி­க­ளுக்­கான தீர்­வினை கண்டறியலாம். 

எனவே குழந்தை பிறப்பு தொடர்பில் தாய், தந்தை விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் தனது கர்ப்ப காலத்தில் பிரசவம் தொடர்பில் வைத்தியர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனை களை கேட்டு அவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment