நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள்

புத்தாண்டுக்காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை நடமாடும் வாகனங்களின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். 

உரிய பொருட்களை குறைந்த விலையில் நாடு முழுவதும் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் 400 சதொச கிளைகள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமான நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். 

அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் வழங்கும் மத்திய நிலையங்கள் சன நெரிசல் நிறைந்த பிரதேசங்களிலும், ரெயில்வே நிலையங்களுக்கு அமைவாகவும், அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment