பொலிஸ் திணைக்களத்திற்கான கான்ஸ்டபிள்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மூன்று மத்திய நிலையங்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
கொட்டாஞ்சேனை விவேகாந்தா கல்லூரி, கொழும்பு- 12 ஹமீட் அல்-ஹூஸைனிக் கல்லூரி, கொழும்பு -13 மத்திய கொழும்பு இந்துக்கல்லூரி ஆகிய மூன்று இடங்களிலும் எழுத்து மூலமான பரீட்சை இடம்பெறவுள்ளது. இதுவரை அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காதவர்கள் 0112-430362 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment