பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள விவசாய சமூகத்தினருக்கு 1053 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்றது.
நாட்டை வளப்படுத்தி நாட்டுக்கு உணவை வழங்குகின்ற விவசாய சமூகத்தினர் நீண்ட காலமாக பயன்படுத்திவரும் காணிகளின் சட்ட ரீதியான உரிமையை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் காணிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்றது.
தமன்கடுவ, லங்காபுர, பொலன்னறுவை, எலகர மற்றும் மெதிரிகிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள விவசாய சமூகத்தினருக்கு இந்த காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
இதனுடன் இணைந்ததாக மூன்று விகாரைக்களுக்கான புண்ணிய பூமி உறுதிகள் வழங்கும் நிகழ்வு, சமய நல்லிணக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கான காணியை வழங்குதல், அரசாங்க அலுவலகங்களிலுள்ள காணிகளில் அலுவலகங்களின் முகாமைத்துவத்தை வினைத்திறனாக மேற்கொள்ளும் வகையில் 14 காணிகளை வழங்குதல், பாடசாலைகளுக்கான காணிகள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணிக்கான விசேட ஆவணம் வைத்தியர் சம்பத் இந்திக்க குமாரவிடம் ஜனாதிபதி கையளித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன, அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலன்னே, மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment