கொழும்பு குப்­பை­களை அகற்ற 24 மணி நேர அவ­காசம் - அமைச்சர் பைஸர் முஸ்தபா அதிரடி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

கொழும்பு குப்­பை­களை அகற்ற 24 மணி நேர அவ­காசம் - அமைச்சர் பைஸர் முஸ்தபா அதிரடி

கொழும்பு மா நகர எல்லை மற்றும் அதனைச் சூழ­வுள்ள பகு­தி­களில் இது­வரை பல வீதி­யோ­ரங்­களில் அகற்­றப்­ப­டாமல் குவிந்­தி­ருக்கும் குப்பை கூளங்­களை, இன்னும் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள், அவ்விடங்­க­ளி­லி­ருந்து அகற்­று­மாறு, மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா கொழும்பு மா நகர சபை ஊழி­யர்­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார். 

அத்­துடன், பொது இடங்­களில் குப்பை மற்றும் கழி­வு­களைக் கொட்டும் பொது­மக்­களைக் கைது செய்­யு­மாறும் அமைச்சர் பொலிஸா­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில், நேற்று இது தொடர்பில் இடம்பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே, அமைச்சர் இவ்­வாறு அதிகா­ரிகள் மற்றும் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்தார். 

இக்­க­லந்­து­ரை­யா­டலில், மா நகர சபை அதி­கா­ரிகள், ஊழி­யர்கள், சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரிகள் மற்றும் பொலிஸ் அதி­கா­ரிகள் எனப்ப­லரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

வீதி ஓரங்­களில் இன்னும் அகற்­றப்­ப­டாமல் உள்ள குப்பைகூளங்களை உட­ன­டி­யாக அகற்றிக் கொள்­ளு­மாறும், இதற்கு நேற்றுக் காலை தொடக்கம் 24 மணி நேர கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், மா நகர அதி­கா­ரிகள் மா நகர ஊழியர்களின் ஒத்­து­ழைப்­போடு இது தொடர்பில் கவ­ன­மெ­டுத்து விரைந்து செயற்­ப­டு­மாறும், அமைச்சர் இதன்­போது கேட்டுக்கொண்டார். 

அத்­துடன், இது தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவறும் அரச மற்றும் தனியார் நிறு­வனப் பணிப்­பா­ளர்கள், அதிகாரி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோசனை வழங்­கி­யுள்ளார்.

No comments:

Post a Comment