இலங்கை உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த 46 அணிகள் பங்குபற்றும் இரு சர்வதேச கனிஷ்ட டென்னிஸ் போட்டிகள் கொழும்பில் இன்று ஆரம்பமாகின்றன. ஆண், பெண் இருபாலாருக்கும் 2 ஒற்றையர் போட்டிகள் மற்றும் ஓர் இரட்டையர் போட்டியைக் கொண்ட உலக கனிஷ்ட டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவுபெறும்.
அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகள், பெண்களுக்கான பெட் கிண்ண டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிமுதல் 17 ஆம் திகதிவரை நடைபெறும். இவை அனைத்தும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணிநிலை தகுதிகாண் சுற்று டென்னிஸ் போட்டிகளாகும்.
இப்போட்டிகளில் குவைத், பாகிஸ்தான், லெபனான், மொங்கோலியா, ஈரான், கட்டார், பசுபிக் ஓஷானியா, பாஹ்ரெய்ன், பூட்டான், மலேசியா, மாலைதீவு, சவூதி, சிரியா, துர்க்மேனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், லாவோஸ், கிர்கிஸ்தான், வரவேற்பு நாடான இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.
No comments:
Post a Comment