ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ அமெரிக்கா உடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்த தாலிபான் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் உட்பட பல பகுதிகளில் தாலிபான் இயக்கத்தினர் மற்றும் ஐ.எஸ் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ள நிலையில், தாலிபான்களை வேரோடு அழிக்கும் வரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச தாலிபான் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 25 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற தீவிரவாத தடுப்பு மாநாடு காபுல் நகரில் நடந்த மறுநாள் தாலிபான் இப்படி ஓர் அழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவுடன் பேச தயாராக இருப்பதாக தாலிபான் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், அந்த அமைப்புடன் பேச தயாராக இல்லை என டிரம்ப் முன்னரே கூறியிருந்தார்.
No comments:
Post a Comment