தேர்தல் பணி பெப்ரவரி 09 இல் பாடசாலைகளுக்கு விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

தேர்தல் பணி பெப்ரவரி 09 இல் பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் தொடர்பில், அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்களிப்பு நடவடிக்கை தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த விடுமுறையை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வாக்குப் பெட்டிகள் மற்றும் ஏனைய காகிதாதிகள் விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகள் மற்றும் 02 கல்வியற் கல்லூரிகளுக்கு நாளை (07) புதன்கிழமை முதல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மற்றும் கல்வியயற் கல்லூரிகள் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, மீண்டும் திங்கட்கிழமை (12) திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை (07) முதல் விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் (19) மற்றும் கல்வியற் கல்லூரிகள் (02)

No comments:

Post a Comment