சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு கொழும்பில் ஆரம்பம். - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 5, 2017

சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு கொழும்பில் ஆரம்பம்.

10ஆவது சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு 'அனைவருக்கும் ஆபத்­தற்ற ஆகாயம்" என்ற தொனிப்­பொ­ரு­ளுக்கு அமைய நேற்று (04) பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது. எதிர்­வரும் 8ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெற­வுள்­ளது.

சர்­வ­தேச நாடு­க­ளுக்­கி­டையில் சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து சேவை­யினைப் பலப்­ப­டுத்­து­வ­துடன், சுற்­று­லாத்­து­றை­யினை நாடுக­ளுக்­கி­டையில் வலு­வூட்­டு­வ­துமே இம்­மா­நாட்டின் கருப்பொருளாகக் காணப்­ப­டு­கின்­றது. 78 நாடு­க­ளிளை பிரதிநிதித்து­வப்­ப­டுத்தும் 500 பிர­தி­நி­திகள் இம்மாநாட்டில் கலந்து கொள்­கின்­றனர். 

போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்­வாவின் தலை­மையில் இம்­மா­நாடு இடம்பெறுகின்­றது. சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, அரச தொழில் மு­யற்சி அமைச்சர் கபீர் ஹாசிம், விமானப் போக்குவரத்து அமைச்சின் செய­லாளர் ஜி.எஸ். விதா­னகே, இலங்கை சிவில் விமான சேவை அதி­கார சபையின் தலை­வர்­ ஆனந்த விம­ல­சேன மற்றும் சிவில் விமான சேவை நிறை­வேற்று பணிப்­பா­ளர்­ உட்­பட பிர­தான நிறை­வேற்று அதி­காரி எச்.எம்.சி. நிமல்­சிறி போன்ற முக்­கிய பிர­மு­கர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்­டனர். 

இதற்கு முன்னர் இம்மாநாடு தென்னாசிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது. 2011ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரில் தாஜ்நட்சத்திர ஹோட்டலில் நடைபெற் றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment