ஆறு முஸ்லிம் நாடுகளுக்கு வீசா தடை செய்த விவகாரம் தொடர்பில் ட்ரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றமும் அனுமதி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 5, 2017

ஆறு முஸ்லிம் நாடுகளுக்கு வீசா தடை செய்த விவகாரம் தொடர்பில் ட்ரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றமும் அனுமதி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதோடு முழு வீச்சில் அதை செயல்படுத்தவும் ஆதரவு அளித்திருக்கிறது.

ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கும் ட்ரம்பின் கொள்கைக்கு எதிரான சில சட்ட ரீதியான தலையீடுகளால் அக்கொள்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் அலுவலகம் அந்தத் தடையை நீக்குk;படி அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 9 நீதிபதிகளில் 7 பேர் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ட்ரம்பின் இக்கொள்கை தொடர்பாக நீதிமன்றங்களில் தற்போது விவாதிக்கப்பட்டு வந்தாலும் கூட சர்ச்சைக்குரிய இந்த கொள்கையை இனி முழுமையாக செயற்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.



No comments:

Post a Comment