ரயில்வே திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட ரயில் சேவை இடம் பெறவுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது. பாடசாலை விடுமுறைக் காலம் முடிவுக்கு வந்த போதிலும் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு மீண்டும் கொழும்பு வரும்போது மக்களின் நலன் கருதி ஜனவரி 7 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை நடைபெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக பதுளை பண்டாரவளை பிரதேசங்களுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பயணிகளின் வசதிகள் கருதி மேலதிக ரயில் சேவைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையும் சொந்த இடங்களுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கு தேவையான பஸ்களை ஈடுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment