பரீட்சை அனு­ம­திப்­பத்­திரம் இது­வரை கிடைக்­காத மாண­வர்கள் அறி­வி­யுங்கள்.! - News View

About Us

About Us

Breaking

Sunday, December 3, 2017

பரீட்சை அனு­ம­திப்­பத்­திரம் இது­வரை கிடைக்­காத மாண­வர்கள் அறி­வி­யுங்கள்.!











கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப்பரீட்சைக்­கான அனுமதிப்பத்­திரம் இதுவரை கிடைக்­காத மாண­வர்கள் மற்றும் அனு­மதி பத்­தி­ரத்தில் ஏதா­வது பிரச்­சி­னைகள் இருப்­ப­வர்கள் தாமதமின்றி அறி­விக்­கு­மாறு பரீட்­சைகள் திணைக்­களம் அறிவித்துள்­ளது. அவ்­வாறு பிரச்­சி­னைகள் இருப்­ப­வர்கள் அது தொடர்பில் 1911 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்புகொண்டு அறி­விக்க முடியும் எனவும் தெரி­விக்கப்பட்டுள்ளது.

அத்­துடன் பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான அனுமதிப்பத்திரங்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கும், தனியார் பரீட்சார்த்­தி­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பரீட்­சார்த்­தி­களின் தனிப்­பட்ட முக­வ­ரிக்கும் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாகவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரி­வித்­துள்ளார்.

இம்­முறை கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் 4 இலட்­சத்து 29 ஆயி­ரத்து 493 பாட­சாலை பரீட்­சார்த்­தி­களும், 2 இலட்சத்து 59 ஆயி­ரத்து 80 தனியார் பரீட்­சார்த்­தி­க­ளு­மாக மொத்தம் 6 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 573 பேர் தோற்­ற­வுள்­ளனர். கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment