ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒன்றுபட்ட நாட்டின் மக்களால் சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் ஒன்றுபட்ட நாட்டின் மக்களாய் சிறப்பான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும். இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment