சிரியாவில் ரஷ்ய நாட்டு விமானப்படை நடத்திய தாக்குதலில் 19 பொதுமக்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா நாட்டின் இப்லிப் மாகாணத்த்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அந்நாட்டின் அரசுப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக ரஷ்ய நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஹாமா மற்றும் இப்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதிகளில் ரஷ்ய விமானப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 19 பொதுமக்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை சிரியாவில் இயங்கிவரும் பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கு நடைபெற்று வரும் போரினால் இதுவரை சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பல லட்சம் மக்கள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடி உள்ளனர்.
No comments:
Post a Comment