அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பரிதாப பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, December 30, 2017

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் சட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. நேற்று முன்தினம் கூட, இந்திய வாலிபர் ஒருவர் பெட்ரோல் பங்க்கில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் பல சட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. 

இங்கு நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இது பற்றி போலீசார் கூறுகையில், ‘‘வேலை செய்யும் இடத்தில் நடந்த மோதலால் இந்த துப்பபாக்கிச்சூடு நடந்துள்ளது. இறந்த 2 பேரில் ஒருவர்தான், மற்ற 2 பேரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.

துப்பாக்கியால் சுட்டவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது அவரை வேறு யாராவது சுட்டுக் கொன்றார்களா என்பது குறித்து தகவல் இல்லை. மேலும், இந்த கட்டிடத்தில் ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. 

அவற்றில் எந்த அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலால் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது தெரியவில்லை. அது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததும், அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டப்படியே அங்கும் இங்கும் ஓடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன' என்றனர்.

No comments:

Post a Comment