தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்க்கு கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்றி அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26ஆம் திகதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment