முஸ்லிம்கள் கொவிட் 19 வழிகாட்டல்களையும் அது தொடர்பான சட்ட திட்டங்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஹஜ் பெருநாள் தினத்தில் இவ்விடயத்தில் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் முஸ்லிம்கள் அசமந்தப் போக்குடன் செயற்பட்டால் ‘ஹஜ் கொத்தணி’ ஒன்றினை முஸ்லிம்கள் உருவாக்கி விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கு நாம் ஆளாவதுடன் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
சவூதி அரேபியா இவ்வருட ஹஜ் கடமைக்குக்கூட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை நாம் மனதில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை, ஷரீஆ கவுன்ஷில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் டாக்டர்கள் வக்பு சபை பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Vidivelli
No comments:
Post a Comment