இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள ஒரு மில்லியன் பலஸ்தீனியர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள ஒரு மில்லியன் பலஸ்தீனியர்கள்

1967 மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

"தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணையம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

1967 முதல் 54,000 க்கும் மேற்பட்ட நிர்வாக தடுப்பு உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்வாக தடுப்புக்காவல் கொள்கை இஸ்ரேலிய அதிகாரிகள் ஒரு கைதியை தடுப்பு அல்லது குற்றச்சாட்டு இல்லாமல் நீட்டிக்க அனுமதிக்கிறது.

1967 முதல் இஸ்ரேலிய சிறைகளுக்குள் மொத்தம் 226 பாலஸ்தீன் கைதிகள் இறந்துள்ளனர் என்று அது மேலும் கூறியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருமே "ஒருவித உடல் அல்லது உளவியல் சித்திரவதை, தார்மீக துஷ்பிரயோகம் மற்றும் கொடூரமான துன்புறுத்தல்" ஆகியவற்றை அனுபவித்ததாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பலஸ்தீனிய கைதிகள் விவகார ஆணையத்தின் தலைவர் காத்ரி அபுபக்கர், சர்வதேச சமூகத்தை அதன் மெளனத்தை கலைத்து பலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான கைதுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment