எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம், இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு இருக்கும் - பேராசிரியர் சரித பட்டியாராச்சி - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம், இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு இருக்கும் - பேராசிரியர் சரித பட்டியாராச்சி

(ஆர்.யசி)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கமானது பல தசாப்த காலத்திற்கு இருக்கும் எனவும் மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை கடல் பரப்பிற்கு பாரிய தாக்கமொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு கடல் எல்லைக்குள் தீப்பிடித்து விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட கடல் பாதிப்பு காரணமாக மிகப்பெரிய ஆபத்தொன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

கப்பலில் இரசாயான திரவங்கள், எண்ணெய் உள்ளிட்ட கடலுக்கு ஏற்பில்லாத பொருட்கள் கடலுக்குள் கலந்துள்ளன. இது கடல் உயிரினங்களை மோசமாக பாதிக்கப்போகின்றது. மீன்பிடி துறைக்கும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

கொவிட் வைரஸ் நிலைமைகளில் மக்களின் வழமையான செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் உண்மையான தாக்கம் என்னவென்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, கப்பலில் இருந்து கடலுக்குள் பரவியுள்ள பிளாஸ்டிக் துண்டுகள் இந்து சமுத்திரம் பூராகவும் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுட்டிக்காட்டி கூறுவதாயின் சோமாலிய தொடக்கம் இந்தோனேசிய வரையிலும், அதேபோல் இந்தியா தொடக்கம் மாலைதீவு வரையிலும் இந்து சமுத்திரம் முழுவதும் இந்த பிளாஸ்டிக் துண்டுகள் பரவுக் கொண்டுள்ளன. இதன் தாக்கமானது சாதாரணமாக கணக்கிட முடியாது.

அடுத்த பல தசாப்தங்களுக்கு இதன் தாக்கம் வெளிப்படும். இந்த தாக்கத்தில் இருந்து மீள வேண்டுமாயின் இருக்கும் ஒரே வழிமுறை என்னவெனில், கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துண்டுகளை முடிந்தளவு கடலில் இருந்து அகற்றியாக வேண்டும்.

அதனை அரசாங்கம் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இலங்கை கடற்படை இணைந்து வேறு எவரையேனும் இணைத்துக் கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயற்பாடுகளில் இறங்க வேண்டும்.

வியாபார நோக்கமாக மாத்திரம் இந்த செயற்பாடுகளை கருத்தில் கொள்ளாது எமது கடல் வளத்தை பாதுகாக்க, கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment