தங்கச் சங்கிலி கொள்ளையர்கள் இருவர் கைக்குண்டு, போதைப் பொருளுடன் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

தங்கச் சங்கிலி கொள்ளையர்கள் இருவர் கைக்குண்டு, போதைப் பொருளுடன் கைது

செ.தேன்மொழி

கடவத்தை பகுதியில் தங்கச் சங்கிலி கொள்ளையில் ஈடுபட்டதாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க சங்கிலிகள் மற்றும் கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிளில் சென்று தங்கச் சங்கிலி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

றாகம பகுதியைச் சேர்ந்த 26, 28 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, வாகன இலக்கத் தகடுகள் மூன்று, 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், கைக்குண்டு மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி இரண்டும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களான இளைஞர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment