கெஸ்பேவ பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் : 10 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

கெஸ்பேவ பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் : 10 பேர் கைது

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக கெஸ்பேவ பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 5 பெண்கள் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகல்ல பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஹோட்டல் உரிமையாளர் உட்பட பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்த மற்றும் அதில் கலந்து கொண்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து சிகரட்டுகள் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஸ்பேவ பொலிஸார் சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment