வெலிகந்த பிரதேச சபைத் தலைவர் பதவி நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

வெலிகந்த பிரதேச சபைத் தலைவர் பதவி நீக்கம்

பெலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பிரதேச சபைத் தலைவர் பியதிஸ்ஸ கமகே பிரியன்த கவிது அபேசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வட மத்திய மாகாண ஆளுனர் மஹீபால ஹேரத் வெளியிட்டுள்ளார்.

பிரதேச சபை தவிசாளர் பிரியன்த கவிது அபேசூரிய, பிரதேச சபை சட்டத்தை மீறி பல தவறுகளை செய்ததாகவும், அவர் மீதான குற்றச்சட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளமையினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வட மத்திய மாகாண ஆளுனர் வர்த்தமானி அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரம விக்ரமாரச்சியினால் மேற்கொண்ட விசாரணை அறிக்கைக்கு அமைய, குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, அவ்வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment