நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக்க அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலே அவர் இன்று காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக்க அபேசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment