பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கான் இரண்டு நாட்களுக்கு முன்னதாகத்தான் சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசியினை எற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment