மத, இன அடிப்படையிலான கட்சிகளை பதியாதிருக்கவும், பதிந்த பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் கவனம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

மத, இன அடிப்படையிலான கட்சிகளை பதியாதிருக்கவும், பதிந்த பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் கவனம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்திவருகிறது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். 

இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

அவ்வாறான அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு, கால அவகாசம் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய ஆணைக்குழுக்கள், தேசிய மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுப்பிரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment