சதோச விற்பனை நிலையங்களில் அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 30, 2021

சதோச விற்பனை நிலையங்களில் அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன்

அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில் இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு தரமான பொருட்களை சாதாரண விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

சந்தையில் உள்ள விலையைக் காட்டிலும் பொருட்களை விற்பனை செய்வதற்கு அரச மற்றும் தனியார் தொழில் முயற்சியாளர்கள் பலர் முன்வந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment