வவுனியாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

வவுனியாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அவர்களது முடிவுகள் இன்று கிடைக்கப் பெற்றது. அதனடிப்படையில் 25 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment