வவுனியாவில் கிணற்றிலிருந்து வெடிபொருள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

வவுனியாவில் கிணற்றிலிருந்து வெடிபொருள் மீட்பு

வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வெடிபொருளை பொலிசார் இன்று (18) மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கிணற்றினை நீண்ட நாட்களிற்கு பின்னர் அதன் உரிமையாளர் துப்புரவாக்கியுள்ளார்.

இதன்போது சேற்றில் புதைந்திருந்த நிலையில், ஆர்.பீ.ஜி செல் ஒன்று இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் ஆர்.பீ.ஜி செல்லை மீட்டுள்ளதுடன், குறித்த கிணற்றினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுடன் தேடுதல் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஓமந்தை விஷேட நிருபர்)

No comments:

Post a Comment