இன்று (19) இரவு 9.00 மணி முதல் நாளை முற்பகல் 7.00 மணி வரையான 10.00 மணி நேரத்திற்கு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஹோமாகம, கலவிலவத்த நீர் பம்பும் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடைப்பட்டிருக்கும் என சபை மேலும் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஹோமாகம, பன்னிபிட்டிய, பெலன்வத்த, மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் இன்று (19) இரவு 9.00 மணி முதல் நாளை முற்பகல் 7.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
இதேவேளை, மொரட்டுவை நீர் பம்பும் நிலையத்திலுள்ள விநியோகக் குழாயில் மேற்கொள்ள வேண்டிய அவசர திருத்த வேலை காரணமாக மொரட்டுவை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு, நாளை (20) இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 8.00 மணி வரையான 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment