கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதில் பாரிய நெருக்கடி ஏற்படும் : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதில் பாரிய நெருக்கடி ஏற்படும் : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர்

(எம்.மனோசித்ரா) 

நாடு தற்போதுள்ள நிலைமை எதிர்வரும் நாட்களிலும் தொடருமாயின் கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்காண்பதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். காரணம் நாடளாவிய ரீதியில் 1,817 பொது சுகாதார பரிசோதகர் மாத்திரமே உள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது சுகாதார பரிசோதகர்கள் 1,817 பேர் மாத்திரமே உள்ளனர். இவர்களில் 1,400 பேர் மாத்திரமே சிரேஸ்ட அதிகாரிகளாவர். 

நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடருமானால் பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறையால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். 

தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது மாத்திரமின்றி தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்காணும் செயற்பாடுகள் பாரிய சிக்கல்கள் ஏற்படும். 

எனவே பயிற்சி பெற்ற இரு குழுக்களையாவது சேவையில் ஈடுபடுத்துவதற்கு உரிய அதிகாரகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment