கொழும்பு - புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரியும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த விற்பனை நிலையம் இன்று (திங்கட்கிழமை) காலை மூடப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் அங்கு பணி புரியும் ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment