சிகிரிய மத்திய கலாசார நிதியத்தின் 10 ஊழியர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிகிரிய மத்திய கலாசார நிதியத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவரின் மனைவி, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊழியரின் மனைவி லாகல கொவிட்-19 சிகிச்சை நிலையத்தில் தாதியர் ஆவர். இந்நிலையில் மேற்கூறப்பட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மொத்தம் 10 ஊழியர்களை அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிகிரிய மத்திய கலாசார நிதியத்தில் அநேக ஊழியர்கள் குருணாகல் மாவட்டத்தில் வசிப்பதால், அவர்களை தற்காலிகமாக பணிக்கு திரும்புவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிகிரியாவுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினாலும், நாட்டின் கொவிட்-19 நிலைமைகளை கருத்திற் கொண்டும் சிகிரியா அருங்காட்சியகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment