முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, இந்தியாவிலிருந்து சாராவை நாடு கடத்தினால் பல உண்மைகளை அறியலாம் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, இந்தியாவிலிருந்து சாராவை நாடு கடத்தினால் பல உண்மைகளை அறியலாம் - முஜிபுர் ரஹ்மான்

சஹ்ரான் ஹாசிம் இன்னொரு வேறு ஒரு தரப்பிற்காகவே தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையான தகவல்களை பெறுவதற்காக சாரா என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாரா என அழைக்கப்படும் பெண் தற்போது இந்தியாவில் மறைந்திருக்கின்றார் என்ற தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சாராவை நாடு கடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அறிய முடியும் என நான் உயிர்த்த ஞாயிறு குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதற்கான பலத்தை வலுவை யார் வழங்கியது என்பதே எங்கள் கேள்வி என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து சாராவை கொண்டுவந்தாலே உண்மைகளை கண்டுபிடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள வேண்டி அளவிற்கு முஸ்லிம்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் தங்கள் உடலில் குண்டுகளை பொருத்தி தேவாலயங்கள் போன்ற அப்பாவி மக்கள் வழிபடுமிடங்களில் தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இலங்கையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment