இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமான போக்குவரத்திற்கு தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்திக் கொள்ள சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல் - அரபு அமீரகம் இடையே கடந்த மாதம் 14 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம்தான்.
இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை சற்று தணிந்துள்ளது. மேலும், ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை அரபு அமீரகம் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தலாம்.
இதற்கிடையில், இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து பிரதமர் பெஞ்சமின் அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் எல் அல் விமானத்தில் இஸ்ரேல் நாட்டில் இருந்து அமீரகத்திற்கு கடந்த 31 ஆம் திகதி பயணம் மேற்கொண்டனர்.
இந்த விமானம் சவுதி அரேபியாவில் வான் பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றது.
இந்த நிகழ்வு மூலம் சவுதி அரேபியா வான் பரப்பு இஸ்ரேல் விமானம் பறந்து புதிய வரலாறு எழுதப்பட்டது. ஏனென்றால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த எந்த ஒரு விமானமும் சவுதி வான் எல்லையை பயன்படுத்த பல ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.
சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியது அதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தையடுத்து இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பயணிகள், உட்பட வகையினான விமான போக்குவரத்தும் விரைவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துக்கு தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்திக் கொள்ள சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் விமானங்கள் இனி சவுதி வான் பரப்பை பயன்படுத்தி நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு செல்லலாம். அதேபோல் அமீரக விமானங்கள் சவுதி வான் பரப்பை பயன்படுத்தி இஸ்ரேல் செல்லலாம். இதன்மூலம் பயண நேரம் பல மணி நேரம் குறையும்.
இந்த நிகழ்வு சவுதி மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை தணித்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment