கோனகங்ஆர பிரதேசத்தில் 7 கஜ முத்துகளுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதையல் மூலம் பெறப்பட்ட கஜ முத்துகளை ஒருவர் வைத்திருப்பதாக கோனகங்ஆர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (06) மாலை கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வகுருவெல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கஜ முத்துகளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வகுருவெல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேகநபரை இன்று (07) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர். இச்சந்தேகநபரிடம் கோனகங்ஆர பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment