வாக்குமூலம் வழங்குவதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 5 மணித்தியாலங்களாக குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பொலிஸ் பிரிவில் ஆஜராகிய பிள்ளையானிடம் மாலை 3 மணி வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்பிற்கு நேற்று (02) அழைத்துவரப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment