2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது

(இராஜதுரை ஹஷான்) 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்றுமதி உற்பத்திகளை ஊக்கப்படுத்தவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது என நிதி மற்றும் மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்தம் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். 

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய உற்பத்திகளை முக்கியத்துவப்படுத்தி 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. 

சுபீட்சமான எதிர்கால தொலைநோக்கு அரசாங்கத்தின் திட்டங்களை பெற்றி கொள்ள தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல்.

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு விடயதானங்கள் வழங்கப்பட்டமைக்கு அமைவாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட வகையில் தொடர்புடைய இலக்கை நிறைவேற்றுவதற்கு தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல். 

நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடி நீரை வழங்குதல் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 100,000 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

நீர்வள மற்றும் நீர்ப்பாசன துறைகளுக்காக முக்கியத்துவம் வழங்குதல். 

அரச வருமானம் 2021 ஆம் ஆண்டிற்குள் தேசிய உற்பத்தியில் 10.2 சதவீதமாக அமையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த நிலைமையின் கீழ் செலவை முகாமைத்துவம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்து வர்த்தக நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி அரச முதலீட்டு வேலைத்திட்டத்திற்காக வளங்களை ஒதுக்கீடு செய்தல். 

அரசாங்க பணிகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல். 

குறைந்த வளங்களை பயன்படுத்தி மிகவும் பயனுள்ள பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் தற்பொழுதுள்ள நடைமுறைகளை மதிப்பீடு செய்து பரந்துபட்ட நடைமுறையில் ஈடுபடுவது தொடர்பில் கவனம் செலுத்துதல். 

குறிப்பிடப்பட்ட கொள்கையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment