கற்பிட்டி, பாலாவி பகுதியில் 10 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர், விசேட அதிரடிப் படையினரால் இன்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காரின் ஆசனத்திற்கு அடியில் குறித்த தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக, விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
குறித்த தங்கத்தை இந்தியாவுக்கு சந்தேகநபர் கடத்தவிருந்தமை தொடர்பில் விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment