நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கட்கிழமை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 9, 2020

நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கட்கிழமை ஆரம்பம்

இன்று முதல் பாடசாலைகளின் கல்வி ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கட்கிழமை (ஓகஸ்ட்10) தொடக்கம் ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைய கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

அதற்கமைய ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.

200க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் தொகையைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவில் திங்கட்கிழமைகளில் முதலாம் தர மாணவர்களும் 5ஆம் தர மாணவர்களும் மாத்திரம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் இரண்டாம் தர மாணவர்களும் 5ஆம் தர மாணவர்களும் மாத்திரம் சமுகமளிக்க முடியும் என்றும் புதன்கிழமைகளில் மூன்றாம் தர மாணவர்களும் 5ஆம் தர மாணவர்களும் மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் 4ஆம் தர மாணவர்களும் 5ஆம் தர மாணவர்களும் வகுப்புக்களுக்கு வர முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தரம் ஒன்று, இரண்டு மூன்றில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும்.

முன்னர் காணப்பட்ட கால எல்லையின் அடிப்படையிலேயே இந்த சந்தர்ப்பங்களிலும் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 200க்கும் அதிக எண்ணிக்கை கொண்டு பாடசாலைகளின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கும் விசேட முறைமை பின்பற்றப்படவுள்ளது.

இதற்கமைய திங்கட்கிழமைகளில் 6,10,11,12,13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

அத்துடன் செவ்வாய்கிழமைகளில் 7,10,11,12, 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

புதன்கிழமைகளில் 8,10,11,12,13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலை சமூகமளிக்க முடியும்.

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் 9 முதல் 13 வரையான தரங்களில் கற்கும் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment