சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் மர்ம விதைகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் மர்ம விதைகள்

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் வரும் மர்ம விதைகள் குறித்து விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் உயிரை இழந்துள்ளனர். 

இன்னும் இந்த நோயின் தாக்கம் ஒரு சில நாடுகளில் தீவிரமாகி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் இருந்துதான் அனைத்து நாடுகளுக்கு பரவியது. ஆனால், சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பொதுமக்களுக்கு அமெரிக்காவின் விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என்றும் அந்த விதைகள் மற்றும் அதன் பேக்கேஜ்களை பத்திரமாக வைத்திருந்து உள்ளூரில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, சீனா உயிரி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கும் மர்மமான விதைகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் கனடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இது குறித்து சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் கூறும் போது லேபிள்கள் "போலியானவை" என்றும் அவை பற்றிய தகவல்களில் தவறுகள் இருப்பதாகவும் கூறியது.

செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது இந்த போலி பார்சலை சீனாவுக்கு திருப்பி அனுப்புமாறு சீனா, அமெரிக்காவின் அஞ்சல் சேவையை கேட்டுள்ளது, அப்போதுதான் அது குறித்து சீனா விசாரிக்க முடியும் எனவும், விதைகளை கையாள்வது குறித்த யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் விதிகளை சீன தபால் சேவை கண்டிப்பாக கடைபிடித்துள்ளது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment