மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்குக் கடற்கரையில் இன்று (27) காலை உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரையொதுங்கிக் காணப்பட்ட இச்சடலத்தை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் உடனடியாக தலைமன்னார் பொலிஸாருக்கு கடற்படையினர் தகவல் வழங்கியதை தொடர்ந்து, குறித்த பகுதிக்கு தலைமன்னார் பொலிஸார் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(மன்னார் நிருபர்- றொசேரியன் லம்பேர்ட்)
No comments:
Post a Comment