இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையிட்டு, அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (29) கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம், 05ஆம், 06ஆம், 07ஆம் திகதிகளில் பாடசாலைகள் மூடப்படும்.
கடந்த 27ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட 11ஆம், 12ஆம், 13ஆம் தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இவ்விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி ஏனைய தரங்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment