கட்டாரிலிருந்து 47 உட்பட 55 பேர் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

கட்டாரிலிருந்து 47 உட்பட 55 பேர் இலங்கை வருகை

கட்டாரிலிருந்து வரவிருந்த ...
வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் உட்பட பயணிகள் 55 பேர் இன்று (27) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களில் சேவையாற்றிய இலங்கையர்கள் 47 பேரும், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களில் பணியாற்றும் 02 குடும்பங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 08 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விமானப் பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment