(எம்.என்.எம்.அப்ராஸ்)
திகாமட்டுல்ல மாவட்டத்தில் சீப்பு சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 02 இன் தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வு சுயேட்சை குழு - 02 இன் முதன்மை வேடப்பாளர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா முன்னிலையில் சாய்ந்தமருதில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்று (28) இடம்பெற்றது
இதன்போது சுயேட்சை குழு - 02 போட்டியிடும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர் .
இங்கு உரையாற்றிய சுயேட்சை குழு - 02 இன் முதன்மை வேட்ப்பாளர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா ஊழல் இல்லாதவர்களை மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்பவர்களை மக்கள் பாரளுமன்றிக்கு தெரிவு செய்ய வேண்டும். மக்களுக்கு புதியதோர் அரசியல் கலாசாரத்தை கொண்டு வந்து புரட்சிகரமான சேவையை செய்வோம் என்றார்.
மேலும் இதன்போது தேர்தல் விஞ்ஞானபனத்தை சுயேட்சை குழு - 02 இன் முதன்மை வேடப்பாளர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா இந்நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு வழங்கி வைத்தார்.
No comments:
Post a Comment