ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உடல் வெப்ப நிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உடல் வெப்ப நிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்கும் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் உடல் வெப்ப நிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை அளவிடும் பணிகள் செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத்தின் மேற்பார்வையில் உடல் வெப்ப நிலை அளவிடும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.
அத்தோடு, செயலகத்திற்கு வருகை தரும் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். அத்தோடு, முகக்கவசம் அணிந்து வருகை தருவதற்கு ஏற்ற ஒழுங்குகளை செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, செயலகங்களுக்கு வருகை தருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் போது, அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றவர்கள் கொரோணா தொற்று அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காணப்படலாமென்ற அடிப்படையில் அலுவலகத்திற்குள் அனுமதிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவாமலிருக்க சுகாதாரப்பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் அரசினால் வழங்கப்படும் அறிவறுத்தல்களையும் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வகையில் செயலகங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment