வாழைச்சேனையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, May 22, 2020

வாழைச்சேனையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தில் கஞ்சாவுடன் 55 வயதுடைய நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.வி.எம்.தாஹா தலைமையிலான பொலிஸாரினால் வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தின் ஹைறாத் வீதியில் வைத்து 210 கிராம் கஞ்சாவுடன் 55 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

No comments:

Post a Comment