ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேக நபரை, எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி வரை தெஹியோவிட்ட, அல்கொட சிறுவர் நன்னடத்தை பிரிவில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சந்தேக நபரை, மாவனல்லை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பொதுச் சுகாதார அலுவலகத்தில் பணி புரியும் குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், அவர் மீது குறித்த சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றினால் நேற்று முன்தினம் (04) தாக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், ஹீனாபோவ பகுதியில் நேற்று (05) சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.
சந்தேகநபர், கடிகமுவவில் வசிக்கும் 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment